மாறி வந்து உரசிச் சென்ற இரு "வான் பறவைகள்"... ஏரோ இந்தியாவில் திரில் சம்பவம்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூருவில் நடந்து வரும் ஏரோ இந்தியா கண்காட்சியில் நேற்று இரண்டு ரெட் புல் விமானங்கள் வானில் சாகசம் செய்து காட்டியபோது நடந்த சிறிய விபத்து பெரும் பரபரப்பூட்டி விட்டது.
இருப்பினும் இந்த விபத்தால் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு விமானத்திற்கு நல்ல சேதம் ஏற்பட்டு விட்டது. இன்னொரு விமானம் லேசான சேதத்தைச் சந்தித்தது.

மொத்தம் மூன்று ரெட்புல் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது அவை ஒரு லூப்புக்கு முயற்சித்தன. அப்போது ஒரு விமானம் தனக்குக் கீழ் பறந்த இன்னொரு விமானத்தின் புரபல்லரில் போய் மோதி உரசி விலகியது. இந்த சம்பவத்தில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன.

இருப்பினும் இரு விமானங்களும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டன. யாருக்கும் இதில் காயம் ஏதும் இல்லை.
இந்த பரபரப்பான தருணத்தின் வீடியோ காட்சி:












Click it and Unblock the Notifications