குடித்துவிட்டு கார் ஓட்டிய ஆப்ரிக்க மாணவர்கள்.. பெண் மீது மோதி விபத்து.. காரை எரித்த பொதுமக்கள்
பெங்களூரு: பெங்களூருவில் சாலையில் தாறுமாறாக ஓடி விபத்தினை ஏற்படுத்திய ஆப்ரிக்க மாணவர்களின் இரண்டு கார்கள் பொதுமக்களால் எரிக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் ஹேசராகட்டா பகுதியில், கணபதி நகர் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மாலை 7 மணியளவில் திருமணம் ஒன்றிற்கு சென்றுவிட்டு சானுல்லா என்பவரும், அவரது மனைவி ஷபானா தாஜும் ரோட்டில் நடந்து வந்துள்ளனர். அப்போது தாறுமாறாக காரினை ஓட்டி வந்த ஆப்ரிக்க மாணவர்களின் ஒரு கார் இருவர் மீதும் மோதியது.
இதனையடுத்து நான்கு மாணவர்களும் பொதுமக்களால் பிடித்து, போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அதில் அவர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டியது தெரியவந்தது. அம்மாணவர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கார் மோதியதில் ஷாபானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாணவர்களின் இரண்டு கார்களையும் தீக்கிரையாக்கினர். இதுகுறித்து போலீசார் தரப்பில், "ஓட்டிவந்த மாணவரும் குடித்திருந்தது தெரிய வந்தால் கொலை வழக்கு பதிவு செய்ய இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications