வீட்டைக் காலி செய்கிறார் மன்மோகன் சிங்.. 10 வருட வாசத்திற்குப் பிறகு
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங், தற்போது குடியிருக்கும் பிரதமர் இல்லத்தை காலி செய்துவிட்டு, மோதிலால் நேரு பிளேஸ் பங்களாவுக்கு குடியேற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 10 வருடமாக இந்த பங்களாவில்தான் அவர் பிரதமராக வசித்து வந்தார். தற்போது தனது இல்லத்தை அவர் காலி செய்யப் போகிறார்.
அவருக்காக புது வீடும் தயாராகி விட்டது. பிரதமர் பதவிக்கு மீண்டும் அவர் வரப் போவதில்லை என்பதால் இந்த புதிய வீட்டில் குடியேறவுள்ளார்.

ரேஸ்கோர்ஸ் சாலையில் வீடு
பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர். மன்மோகன் சிங், தற்போது டெல்லியின் ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார்.

பதவியிலிருந்து ஓய்வு
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ள பிரதமர் மன்மோகன் சிங், தற்போது குடியிருக்கும் பிரதமர் இல்லத்தை காலி செய்துவிட்டு, மோதிலால் நேரு பிளேஸ் பங்களாவுக்கு குடியேற தயாராகி வருகிறார்.

ஷீலா தீட்சித் வீடு
நான்கு படுக்கைகள் கொண்ட இந்த மிகப்பெரிய பங்களாவை சமீபத்தில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் காலி செய்தார். அதன்பின்னர் மன்மோகன் சிங் குடியேற உள்ளதால், அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வாழ்நாள் முழுவதும் இனி இங்குதான்
இந்த பங்களா மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications