100 ஆண்டுகளாச்சு... முதல் உலகப் போருக்கு பின் ராஜஸ்தானில் 'சரித்திரம் படைத்த' மே மழை!
ஜெய்ப்பூர்: பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் 1917-ம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 100 ஆண்டுகள் கழித்து தற்போது மே மாதத்தில் மிக அதிகமான மழை கொட்டி தீர்த்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாலைவனப்பகுதிகளை பெருமளவு கொண்ட எல்லை மாநிலம். இம்மாநிலத்தில் கோடை மழை என்பது சொற்பமான அளவாகத்தான் இருந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மே மாத சராசரி மழை என்பது 13.6 மி.மீ. என்பதாகவே உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மே மாதத்தில் கடைசியாக அதிக மழை கொட்டியது 1917-ம் ஆண்டில். அப்போது மகாத்மா காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்திய தருணம். ராஜஸ்தான் பாலைவனத்தை கருமேகங்கள் சூழ்ந்து வானம் வெடித்தது போல மழை வெளுத்து வாங்கியது. அப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவான மழை அளவு 71.9 மி.மீ. அதன் பின்னர் அப்படி ஒரு மழை பெய்யவே இல்லை என்கிற ஏக்கம் இருந்து வந்தது.
தற்போதைய ஆண்டுதான் மீண்டும் பெருமழை ராஜஸ்தானில் பெய்துள்ளது. நடப்பு மே மாதத்தில் ராஜஸ்தானில் 62.4 மி.மீ மழை பெய்துள்ளது. மே 29-ந் தேதியன்று பிகானிரில் 72.8 மி.மீ. மழை கொட்டியது. இதற்கு முன்னர் பிகானிரில் 1999-ம் ஆண்டு 63.1 மி.மீ. மழை பெய்திருந்தது. நடப்பாண்டில் ராஜஸ்தானின் 33 மாவட்டங்களிலும் சராசரி அளவைவிட அதிகமான மழை பெய்துள்ளது என்கின்றன வானிலை மைய தகவல்கள்.
தலைநகர் டெல்லியிலும் மே மாதாத்திலும் மிக குளிர்ச்சியான வானிலை நேற்று இருந்தது. கடந்த 36 ஆண்டுகளில் டெல்லி வானிலை சட்டென மாறியது முதல் முறையாகும். டெல்லி வாசிகள், இதமான வானிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications