உடைகிறது ஆம் ஆத்மி? சமாதான முயற்சிகள் தோல்வி- நாளை செயற்குழு கூட்டத்தில் கிளைமாக்ஸ்?
டெல்லி: ஆம் ஆத்மியில் உட்கட்சி பூசல் உச்சகட்டமைந்துள்ள இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து கேஜ்ரிவால் விலக வேண்டும் என்பதில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் உறுதியாக உள்ளனர். இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியும் தோல்வியில் முடிந்த பரபரப்பான சூழலில் ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி. கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றது முதல் உள்கட்சி பூசல் தலைதூக்கியது.

அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். கட்சியின் கொள்கைகளை மீறி கேஜ்ரிவால் சர்வாதிகாரமாக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினர். தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் அரசியல் விவகார குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். யோகேந்திராவிடம் இருந்து செய்தி தொடர்பாளர் பதவியும் பறிக்கப்பட்டது. அப்போது, கட்சிக்குள் நடக்கும் மோதல் தமக்கு மனவருத்தத்தை அளிப்பதாக கேஜ்ரிவால் தெரிவித்தார்.
உட்கட்சி பிரச்னையை சரிசெய்யும் வகையில் சிறப்பு குழு ஒன்றை கெஜ்ரிவால் அமைத்தார். ஆனாலும் கட்சி தலைவர்களுக்குள் ஏற்பட்டு வரும் மோதல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது.
இந்நிலையில் உட்கட்சி பிரச்னைக்கு முடிவுகட்ட கட்சி தலைமை திட்டமிட்டது. பிரசாந்த், யோகேந்திராவிடம் சமாதான பேச்சுவார்த்தையில் கட்சி தலைமை ஈடுபட்டு வருகிறது. இருவரிடமும் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறுகையில், பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோரிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கேஜ்ரிவாலை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளனர் என்றார்.
ஆம் ஆத்மியில் நிலவிவரும் உட்கட்சி பூசல் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. உட்கட்சி பிரச்னையால் மக்கள் நலப்பணிகளில் அக்கட்சி கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. எனவே, இந்த விவகாரத்துக்கு முடிவு கட்டும் நிலையில் கட்சித்தலைமை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து கேஜ்ரிவால் விலகுவாரா அல்லது பூஷண், யாதவ் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்களா என்பது நாளைய தேசிய கவுன்சில் கூட்டத்தில் தெரிய வந்துவிடும். நாளைய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஆம் ஆத்மியின் 400 உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் பூஷண், நாங்கள் கட்சி மறுசீரமைப்புக்காக 5 அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளோம். நாளை கூட்டத்தில் அது நிராகரிக்கப்பட்டால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவோம் என்றார்.
நாளை கிளைமாக்ஸ்?
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications