மத்திய அரசின் அடுத்த குறி பில்கேட்ஸ்-மெலிண்டா பவுண்டேஷன்?
டெல்லி: கிரீன்பீஸ் மற்றும் போர்டு பவுண்டேஷன் மீது நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு அடுத்து பில் மற்றும் மெலின்டா பவுண்டேஷன் மீது குறி வைத்துள்ளதாக தெரிகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நிறுவிய இந்த பவுண்டேஷன் மீது மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 10 வருடமாக செயல்பாட்டில் உள்ளது பில் - மெலின்டா பவுண்டேஷன்.

நன்கொடை விசாரணை:
இந்த நிலையில் இந்த அறக்கட்டளைக்கு அளித்த ஒரு நன்கொடை குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவைச் சேர்ந்த பொது சுகாதாரக் கழகம் என்ற அமைப்புக்கு அளித்த நன்கொடை குறித்த விசாரணை இது.

நிதியில் முறைகேடு:
இதுகுறித்து அகமதாபாத் மிர்ரர் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பொது சுகாதாரக் கழகத்திற்கு கேட்ஸ் பவுண்டேஷன் நிதியுதவி செய்ததில் முறைகேடு இருப்பதாக தெரிகிறது என்று வெளியான செய்தியைத் தொடர்ந்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆராய உத்தரவு அவ்வளவே:
இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இது வழக்கமான விசாரணை அல்ல. கிடைத்த தகவலின் அடிப்படையில் அது என்று ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது அவ்வளவுதான் என்றார்.

அடுத்தது கேட்ஸ்:
அதேசமயம், சமீபத்தில் கிரீன்பீஸ் மற்றும் போர்டு பவுண்டேஷன் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் அடுத்த குறி கேட்ஸ் பவுண்டேஷனாக இருக்குமோ என்ற கேள்வி எழாமல் இல்லை.
இதுவரை கேட்ஸ் பவுண்டேஷனுக்கு விசாரணை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடமிருந்து எந்த சம்மனும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

கடுமையான அதிருப்தி:
சமீப காலமாக என்ஜிஓக்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. சமீபத்தில் கிரீன் பீஸ் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச மற்றும் உள்ளூர்க் கணக்குகளை முடக்க வைத்தது உள்துறை அமைச்சகம். இதனால் அந்த அமைப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

மத்திய அரசு தடை:
அதேபோல போர்டு பவுண்டேஷன் நிறுவனமானது, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நிதியுதவி அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக லாபம் சம்பாதிக்கும் பல நிறுவனங்களுக்கு உதவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த அமைப்புக்கு அதிரடியாக தடை விதித்தது மத்திய அரசு. இந்த நிலையில்தான் பில் கேட்ஸ் பவுண்டேஷன் மீது மத்திய அரசின் கவனம் திரும்பியுள்ளது.

பத்மவிபூஷன் விருது:
உண்மையில் இந்த கேட்ஸ் அறக்கட்டளைக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு பத்மபூஷன் விருது அளித்துக் கெளரவித்தது நினைவிருக்கலாம். மேலும் பில் கேட்ஸ் மற்றும் மெலின்டா கேட்ஸ்யைும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மேலும் அவர்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு புகழாரம்:
மேலும் பில் கேட்ஸும் கூட பிரதமர் மோடியை வெகுவாகப் புகழ்ந்து பேசியிருந்தார். தனது பிளாக்கிலும் மோடியை வெகுவாக புகழ்ந்து புகழாரம் சூட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications