ஜார்கண்ட் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு! இரவில் கைதான ஹேமந்த் சோரன்! பரபரக்கும் ராஞ்சி
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வரான ஹேமந்த் சோரனை இன்று இரவு அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. இதையடுத்து ஜார்கண்ட்டின் புதிய முதலமைச்சராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இருந்தார். இந்நிலையில் தான் நில சுரங்க முறைகேடு குற்றச்சாட்டுகள் ஹேமந்த் சோரனுக்கு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளன.

மேலும் அவரிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தான் எப்போது வேண்டுமானாலும் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் தான் இன்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அமலாக்கத்துறையினர் ஹேமந்த் சோரனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் முடிவில் ஹேமந்த் சோரன் அதிரடியாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் ஜார்கண்ட்டின் புதிய முதல்வர் யார் ? என்ற பெரிய கேள்வி எழுந்தது. மேலும் ஹேமந்த் சோரன் தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட இருப்பதை முன்கூட்டியே அறிந்து இருந்தார். இதையடுத்து ராஞ்சியில் நேற்று அடுத்த முதல்வரை தேர்வு செய்ய எம்எல்ஏக்கள் கூட்டத்தை ஹேமந்த் சோரன் கூட்டினார்.
இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அடுத்த முதல்வர் யார்? என்பது தொடர்பாக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் மற்றும் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சாம்பை சோரன் ஆகியோரின் பெயர்களை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.
இதில் அதிகமான எம்எல்ஏக்கள் சாம்பை சோரனின் பெயரை தேர்வு செய்தனர். இது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஹேமந்த் சோரன் கைதான நிலையில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஜார்க்கண்ட்டின் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications