மார்க்சிஸ்ட் கட்சியினரின் தொண்டையை அறுங்க...: திரிணாமுல் தபஸ் பாலின் மற்றொரு சர்ச்சை பேச்சு!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களின் குடும்ப பெண்களை பலாத்காரம் செய்ய சொல்வேன் என்று பேசி பெரும் பிரயளத்தை கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தபஸ் பாலின் மற்றொரு வன்முறை தூண்டும் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. தபஸ் பால், கட்சி தொண்டர்களது குடும்ப பெண்கள் மீது எதிர்க்கட்சியினர் கை வைத்தால் சும்மா இருக்க மாட்டேன். எனது இளைஞர் படையை மார்க்சிஸ்ட் தொண்டர்களின் வீடுகளுக்கு அனுப்பி அவர்களது குடும்பப் பெண்களை பலாத்காரம் செய்ய சொல்வேன்" என்று கூறியிருந்தார்.

After rape remarks, TMC MP Tapas Pal now asks party supporters to slit throats of CPI(M) workers

இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் தபஸ் பால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

அவரைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸின் மற்றொரு எம்.பி. ஆரூப் சக்கரவர்த்தி, வெளியாட்கள் எவரேனும் வீட்டில் நுழைந்தால் தலையை வெட்டுங்க என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் தபஸ் பால் எம்.பி.யின் மற்றொரு சர்ச்சை பேச்சு வீடியோ வெளியாகி உள்ளது. அதில், மனிதர்களைக் கொலை செய்கிறவர்கள் மனிதர்களே அல்ல.. மார்க்சிஸ்ட் கட்சியினரை இனியும் விட்டு வைக்காதீர்.. நமது வீட்டு பெண்களுக்கு நான் சொல்வது என்னவெனில், எதிர்க்கட்சியினர் வீட்டுக்கு நுழைந்தால் காய்கறி வெட்ட பயன்படும் அரிவாள் மனையாலேயே அவர்களது தொண்டயை வெட்டிவிடுங்கள்.. என்று கூறியுள்ளார்.

தபஸ் பாலின் இந்த பேச்சு அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+