சத்தீஸ்கரில் மன்மோகன்சிங், அத்வானி இன்று தேர்தல் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil

சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தல் நவம்பர் 11ந் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 19ந் தேதியும் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அம்மாநிலத்தின் கஸ்டோல், பிலாஸ்புர் மற்றும் பட்டபாரா தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டு அத்வானி உரையாற்ற உள்ளார்.
ராய்ப்பூரில் நடைபெறும் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்குக சேகரிப்பார். இதனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications