பிரதமர் மோடியை பாராட்டும் அரவிந்த் கேஜ்ரிவால்!
டெல்லி: டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர் மோடியை பாராட்டிப் பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்காக ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏக்களை விலை பேசுவதாகவும் புகார்கள் எழுந்தன.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஒருவரை பாஜக மூத்த தலைவர் ஒருவர் ரூ4 கோடிக்கு பேரம் பேசிய சிடி ஒன்றும் வெளியிடப்பட்டது.. இந்த களேபரங்களுக்கு மத்தியில் ஆம் ஆத்மி தலைவர்கள் ஒவ்வொருவராக பிரதமர் மோடியை பாராட்டி வருகின்றனர்.

குமார் விஸ்வாஸ்
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ், அண்மையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை விட தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறியிருந்தார்.

கேஜ்ரிவால் புகழாரம்
இந்த நிலையில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேட்டியில் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளதாவது:

மக்கள் நம்பிக்கை
மோடி அரசு மீது நாட்டு மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர். பண வீக்க விகிதத்தை கட்டுப்படுத்துதல், ஊழலை தடுத்தல், விலை வாசி உயர்வைக் குறைத்தல் ஆகியவற்றை மோடி செய்வார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புகழ்பெற்ற தலைவர்
ஆனால் இந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் எதிர்பார்ப்புகளாகவே இன்னமும் இருக்கிறது. நாட்டின் புகழ்பெற்ற தலைவர்களில் மோடியும் ஒருவர். நான் பிரதமராக ஆசைப்படுவதாக எனக்கு எதிராக பிரசாரம் செய்யப்படுகிறது.

பிரதமராகும் ஆசை இல்லை
அப்படி ஒரு ஆசை எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில்தான் நான் மோடியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டேன்.

தேர்தல் நடத்தியிருந்தால்..
டெல்லி முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்த உடனேயே சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் பெரும்பான்மையுடன் அம்மாநில முதல்வராக 5 ஆண்டுகால ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பேன்.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications