டுவிட்டர் சர்ச்சையில் மீண்டும் சிக்கிய மெஹர் தரார்...
டெல்லி: சுனந்தா புஷ்கர் விவகாரத்தில் அடிபட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவரான பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர் தரார் இன்னொரு டுவிட்டர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த முறை அவர் காஷ்மீரை கையில் எடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா தரூர் கடந்த மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு சசி்க்கும், மெஹர்க்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டிருந்தார் சுனந்தா. இதுதொடர்பாக டிவிட்டரில் இருவருக்கும் இடையே கடும் மோதலும் மூண்டது. இதன் விளைவு- சுனந்தாவின் மரணம்.

இந்நிலையில் மெஹர் தரார் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்குமே உண்மையைக் கையாளும் திறமை இல்லை. காஷ்மீர் என்ற பெயரில் இருவருமே வெற்றுக்கூச்சல் போடுகின்றனர். காஷ்மீரைப்பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு பாகிஸ்தான் முதலில் கராச்சி போன்ற நரகத்தில் வாடும் பகுதிகளை கவனிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும் இக்கருத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில், "நான் பாகிஸ்தானை மிகுந்த அளவு நேசிக்கிறேன்.அந்த நேசமே அதன் தவறை சுட்டிக்காட்ட என்னை தூண்டுகிறது. நான் இன்று கூறியது காஷ்மீருக்காக அல்ல பாகிஸ்தானுக்காக" என்றும் கூறியுள்ளார்.
காஷ்மீர் பற்றிய பிரசாரத்தை பாகிஸ்தான் தீவிரமாக செய்து வரும் இந்நிலையில் மெஹர் தராரின் இக்கருத்துக்கு அந்த நாட்டில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சையின் மூலம் டுவிட்டரில் மெஹர் தராரின் பாலோயர்கள் 49,000 ஆக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications