3000 கன அடி போதாது என்கிறது தமிழ்நாடு.. அதையும் விட முடியாது என்கிறது கர்நாடகா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரையும் திறந்துவிடும் நிலையில் கர்நாடகா இல்லை என்று கூறி காவிரி மேற்பார்வை குழு உத்தவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அம்மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த வாரம் நடந்த காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதனை ஏற்க கர்நாடகா மறுத்துள்ளது.

After Tamil Nadu Karnataka too files objections to supervisory committee order

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 138 பக்க அறிக்கையில், காவிரி மேற்பார்வை குழு உத்தரவுப்படி 3000 கன அடிநீர் போதாது. குழுவின் உத்தரவில் திருப்தி அளிக்கவில்லை. தற்போது குடிநீர் பற்றாக்குறை என கர்நாடகா கூறுவதை ஏற்க முடியாது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி 134 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வேண்டும். இதுவரை தமிழகத்திற்கு 57.5 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. ஜூன் முதல் செப்., வரை 17.5 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா தர வேண்டியுள்ளது. இதனை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும் எனக்கூறியுள்ளது.

காவிரி மேற்பார்வை குழு உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கர்நாடகாவில் 27.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும், குடிநீர் தேவைக்கு இதில் 26.33 டிஎம்சி தண்ணீர் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மேற்கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்பது கர்நாடகாவின் வாதம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+