கர்நாடக தேர்தல் முடிவு-முழு முடிவும் வெளியான பின் ஆலோசனை.. எடியூரப்பா தகவல்
கர்நாடக தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியான பின் ஆலோசனை நடத்தப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: கர்நாடக தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியான பின் ஆலோசனை நடத்தப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. காலையில் பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.

பின்னர் அதிரடியாக பாஜக முன்னிலை வகித்தது. பெரும்பான்மைக்கு தேவையானதை விடவும் அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்தது.
ஆனால் திடீரென நிலைமை தலைகீழானது. இதைத்தொடர்ந்து ஜேடிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.
இதற்கான பணிகளில் அக்கட்சிகள் அவசர அவசரமாக இறங்க பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் குறித்து அனைத்து முடிவுகளும் வெளியான பின் ஆலோசனை நடத்தப்படும்.
பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும். முடிவுகள் வெளியான பின் டெல்லி சென்று தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.
ஜேடிஎஸ்- காங். ஆட்சி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications