நாடாளுமன்ற தாக்குதலில் அப்சல் குருவுக்கு தொடர்பு இருக்குமா?.. ப.சி.க்கு இப்போது வந்த சந்தேகம்
டெல்லி: நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சதியில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு தொடர்பு இருக்குமா என்பது சந்தேகமே என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மீது 2001-ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் தொடர்புடைய அப்சல் குரு கைது செய்யப்பட்டு 2013-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அதற்கு முன்னதாக 2008ஆம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்தார் ப.சிதம்பரம்.

தற்போது டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி நடத்திய விவகாரம் வெடித்திருக்கும் நிலையில் எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டுக்கு ப.சிதம்பரம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நாடாளுமன்றத் தாக்குதலில் அப்சல் குருவுக்கு தொடர்பிருக்குமா? என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார்.
இது குறித்து சிதம்பரம் கூறுகையில், அப்சல் குருவுக்கு நாடாளுமன்றத் தாக்குதல் சதியில் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் தனிப்பட்ட முறையில் எனக்கு இருக்கிறது. அப்படியே தொடர்பிருந்தாலும் அவரது பங்கு எந்த அளவுக்கு என்பது குறித்தும் சந்தேகம் உள்ளது.
அப்சல் குருவை தூக்கிலிட்ட போது அமைச்சரவையில்தான் இருந்தேன். ஆனால் உள்துறை அமைச்சராக அல்ல... நான் நினைப்பதெல்லாம் சொல்லிவிட முடியாது. நீங்கள் அந்த நாற்காலியில் உட்கார்ந்தாலும் அந்த முடிவைத்தான் எடுப்பீர்கள்
அரசாங்கத்தில் இருந்து கொண்டு நீதிமன்றம் தவறாக முடிவெடுத்துவிட்டது என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் அரசுதான் வழக்கை நடத்தியது. அப்படி அப்சல் குருவுக்கு சதியில் தொடர்பு இருந்தாலும் பரோல் இல்லாத வாழ்நாள் ஆயுள் தண்டனை கொடுத்திருக்கலாம் என்றார்.
மேலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவரக்ள் மீது தேசதுரோக வழக்கு தொடர்ந்திருப்பது மூர்க்கத்தனமான நடவடிக்கை; நீதிமன்றம் முதல் கட்ட விசாரணையிலேயே தேசதுரோக பிரிவுகளை ரத்து செய்யும் என்றும் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications