அரசியல் காரணங்களுக்காக அப்சல் குருவைத் தூக்கிலிட்டது காங். அரசு - உமர் அப்துல்லா
டெல்லி: முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அரசியல் காரணங்களுக்காகவே அப்சல் குருவைத் தூக்கிலிட்டது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
அப்சல் குருவை தூக்கில் போடப் போவது குறித்து சில மணி நேரங்களுக்கு முன்புதான் அப்போது முதல்வராக இருந்த எனக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெரிவித்தது என்று கூறியுள்ளார் உமர் அப்துல்லா.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அப்போது எனது சகோதரியுடன் டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடமிருந்து எனக்குப் போன் வந்தது. அப்சல் குருவைத் தூக்கிலிடுவது தொடர்பான ஆவணத்தில் தான் கையெழுத்திட்டு விட்டதாகவும், அடுத்த நாள் அதிகாலையில் அவர் தூக்கிலிடப்படவுள்ளதாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் என்னை அவர் கேட்டுக் கொண்டார்.
அப்போதும் கூட நான், இதை நிறுத்த எதுவும் செய்ய முடியாதா என்று கேட்டேன். அதற்கு அவர் நான் கையெழுத்துப் போட்டு விட்டேன். வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டது. இதன் விளைவுகளை சமாளிக்கத் தயாராகுங்கள் என்று மட்டும் எனக்குப் பதிலளித்தார்.
ஆனால் ராஜீவ் காந்தி, பியாந்த் சிங் வழக்குகளில் கொலையாளிகள் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு மாறுபட்டு நடந்து கொண்டது. நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, அப்சல் குரு அரசியல் காரணங்களுக்காக தூக்கிலிடப்பட்டார். அதுதான் உண்மை என்றார் உமர் அப்துல்லா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications