இரவோடு இரவாக நடந்த சோதனை.. சரியாக இலக்கை தாக்கிய அக்னி 2.. ஒடிசாவில் என்ன நடந்தது?
நேற்று இரவோடு இரவாக அக்னி 2 ஏவுகணை ஒடிசா அருகே கடல் பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
புவனேஷ்வர்: நேற்று இரவோடு இரவாக அக்னி 2 ஏவுகணை ஒடிசா அருகே கடல் பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. சோதனை மிக துல்லியமாக வெற்றிபெற்றதாக பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பாதுகாப்பில் அக்னி வகை ஏவுகணை அதிக முக்கியத்துவம் வகிக்கிறது. அக்னி 1 தொடங்கி அக்னி 5 வரை பல்வேறு வகையான அக்னி ஏவுகணைகளை இந்தியா உருவாக்கி பயன்படுத்தி வருகிறது. இதில் அக்னி 5 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமாக சென்று தாக்க கூடியது.
அக்னியின் மற்ற ஏவுகணைகள் அவ்வப்போது சோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், நேற்று திடீர் என்று அக்னி 2 ஏவுகணை இரவோடு இரவாக சோதனை செய்யப்பட்டது.

யார் செய்தது
அக்னி 2 ஏவுகணை ஒரு தரைப்பரப்பில் இருந்து இன்னொரு தரைப்பரப்பில் உள்ள டார்க்கெட்டை தக்க கூடிய வகையான ஏவுகணைகள் ஆகும். இதை ஆங்கிலத்தில் surface to surface ஏவுகணை என்று கூறுவார்கள். இந்தியா உருவாக்கி உள்ள இந்த அக்னி 2 ஏவுகணை 2000 -3500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும்.

சரியாக தாக்குதல்
நேற்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக மீண்டும் சோதனை செய்யப்பட்டது. ஒடிசா அருகே இருக்கும் இந்திய கடல் பகுதியில் அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை செய்யப்பட்டது. அங்கிருக்கும் ஏவுதளம் 4ன் மூலம் இந்த அக்னி 2 ஏவப்பட்டது. இது மிக துல்லியமாக தாக்குதலை நடத்தியது.

யார் செய்தது
இந்தியாவின் பாதுகாப்பு படையில் இருக்கும் Strategic Forces Command எனப்படும் எஸ்எப்சி படை பிரிவு மூலம் இந்த சோதனை செய்யப்பட்டது. டிஆர்டிஓ படையினர் இந்த சோதனையை உடன் இருந்து கவனித்து இருக்கிறார்கள். சரியாக 1000+ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புள்ளியை இந்த ஏவுகணை தாக்கி உள்ளது.

முதலில் எப்போது
இந்த அக்னி 2 ஏவுகணை முதல் முதலாக 1999ல் சோதனை செய்யப்பட்டது. அதன்பின் மீண்டும் 2010ல் சோதனை செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தில் தற்போது இது பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 17 டன் எடை கொண்ட இது 1000 கிலோ எடையை தூக்கி செல்லும். இது 20 மீட்டர் நீளம் கொண்டது.

ஏன் திடீர் சோதனை
இந்த அக்னி 2 ஏவுகணையை இரவில் சோதனை செய்தது இல்லை. இரவில் இதன் தாக்குதல் திறனை சோதிப்பதற்காக நேற்று சோதனை செய்துள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் இந்த அக்னி 2 ஏவுகணை அப்டேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications