ஆக்ராவில் சர்ச்சுக்குள் புகுந்து மேரி மாதா சிலையை சேதப்படுத்திய விஷமிகள்
ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தேவாலயத்தை யாரோ தாக்கி அங்கருந்த அன்னை மேரியின் சிலைகளை சேதப்படுத்தி அதை அவமதித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் பிரதாப்பூரா பகுதியில் புனித மேரி தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலை புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 2 சிலைகளை உடைத்துள்ளனர். அன்னை மேரியின் சிலையை அது இருந்த இடத்தில் இருந்து பெயர்த்துள்ளனர். மேரி மாதா சிலையின் கையில் குழந்தை யேசுவின் தலையை வைத்துள்ளனர். மேலும் மேரி மாதாவின் சிலைகளில் ஒன்றின் கழுத்தில் நாய்ச் சங்கிலியை சுற்றி வைத்துள்ளனர்.

இது குறித்து தேவாலயத்தில் பணிபுரியும் பாதிரியார் மூன் லசாரஸ் கூறுகையில்,
மர்ம நபர்கள் எங்கள் மத நம்பிக்கையை காயப்படுத்தும் வகையில் இவ்வாறு செய்துள்ளனர். அவர்கள் தேவாலய ஜன்னல்களின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அதிகாலை 3.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தேவாலய வளாகத்தில் நின்ற காரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியபோது அதன் அலாரம் சப்தம் கேட்டு நான் கண்விழித்து ஓடி வந்தேன். அதற்குள் அவர்கள் தப்பியோடிவிட்டனர் என்றார்.
இந்த சம்பவத்தை கண்டித்து கிறிஸ்தவ மக்கள் வியாழக்கிழமை மாலை ஆக்ராவில் கண்டன பேரணி நடத்தினர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications