விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது கடன் கொள்கைக்கே எதிராானது.. ரிசர்வ் வங்கி ஆளுநர் தடாலடி

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தால் அது கடன் வழங்கும் ஒழுங்கு முறையை பாதிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயக் கடன் ரத்து என்பது கடன் கொள்கைகளுக்கு எதிரானது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்தார்.

வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 24-ஆவது நாளாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Agricultural debts waive off will affect regulation of debt issuing

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் பட்டேல் கருத்து தெரிவிக்கையில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தால் அது கடன் வழங்கும் ஒழுங்கு முறையை பாதிக்கும். மேலும் அத்தகைய கடன் ரத்து என்பது கடன் கொள்கைக்கு எதிரானது.

இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். அதாவது நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் 4.5 சதவீதமும், பிற்பாதியில் 5 சதவீதமும் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருக்கும். மேலும் நேர்மையான முறையில் கடன் பெறுவதை பாதிக்கும் வகையில்இந்த விவசாயக் கடன் ரத்து இருக்கும். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+