ஒரு வண்டியும் உள்ள போகக்கூடாது.. பிரதமர் அலுவலகத்தை அதிர வைத்த அதிமுக எம்.பிக்கள்
டெல்லி: பிரதமர் அலுவலகம் எதிரே அதிமுக எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வாகனங்கள் எதையும் உள்ளே நுழைய தடுத்து நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் பிரதமர் மோடியிடம் மனு அளிக்க மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் பிரதமர் அலுவலகம் கிளம்பி சென்றனர்.

ஆனால், பிரதமரிடம் இக்குழு அப்பாயின்மென்ட் வாங்கவில்லை என கூறப்படுகிறது. முயற்சி செய்து பார்த்தும் அனுமதியை தரவில்லை என்கிறார்கள் அதிமுகவினர்.
இந்நிலையில், பேரணியாக சென்றவர்களை, பிரதமர் அலுவலக பாதுகாவலர்கள் உள்ளே விடவில்லை, இதனால் அதிமுகவினர் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்ற பிற அலுவல் வாகனங்களை அவர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு வீரர்கள் வந்து, வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு மிகுந்த பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு துறை அலுவலகங்கள் அங்குதான் அமைந்துள்ளன என்பதால் இப்போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications