காவிரி: அதிமுக எம்பிக்கள் தற்கொலைதான் அடம் பிடிக்க வேண்டாம்...ஜஸ்ட் பதவியை ராஜினாமா செய்தாலே போதுமே!
Recommended Video

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் தற்கொலைதான் செய்வோம் என்று அதிமுக எம்.பிக்கள் அடம்பிடிக்காமல் பதவியை ராஜினாமா செய்தாலே போதும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இப்படி தற்கொலை என பேசுவதெல்லாம் பக்கா நாடகம்தான் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. தமிழக அனைத்துக் கட்சிகள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு 29-ந் தேதி வரை பொறுத்திருந்துவிட்டு கருத்து சொல்வோம் என்கிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறதாம் மத்திய பாஜக அரசு.
மத்திய பாஜக அரசின் இந்த பச்சை துரோகம் தமிழகத்தை கொதிக்க வைத்துள்ளது. இதனிடையே ராஜ்யசபாவில் இன்று பேசிய அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் நாங்கள் ராஜினாமா செய்யமாட்டோம்... அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தற்கொலைதான் செய்வோம் என ஆவேசப்பட்டிருக்கிறார்.
ஆனால் இந்த ஆவேசத்தை தமிழக மக்கள் ஒரு திசை திருப்பும் நாடகமாகத்தான் பார்க்கிறார்கள். தமிழருக்கு துரோகம் செய்யும் பாஜக அரசுக்கு முட்டுக் கொடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதை தடுத்து காவிரிக்காக அமளி என நாடகம் போட்டனர். அந்த நாடகத்தை நாடும் நாட்டு மக்களும் நன்கு உணர்ந்து கொண்டனர்.
இப்போது தற்கொலை செய்வேன்; கூண்டோடு சாவோம் என்றெல்லாம் ஜம்பம் பேசாமல், அன்று மத்திய அமைச்சராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி செய்ததைப் போல உங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசின் முகத்தில் ராஜினாமா கடிதங்களை வீசி எறிந்துவிட்டு வாருங்கள்... அதை மட்டுமேதான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இதுபோன்ற வசனங்களை அல்ல!
-
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
ஹார்முஸ் நீரிணை உலகத்தின் இதயம்.. இந்தியா டூ அமெரிக்காவை ஆடிப்போக வைத்த ஈரான் செயல் -
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிக்கு தந்த ட்விஸ்ட்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்தை அனுப்பியது ஏன்?












Click it and Unblock the Notifications