ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் அதிமுக, திமுக ஒருமித்த குரல்
டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் ராஜ்யசபாவில் கோரிக்கை விடுத்து பேசினார். இவரது பேச்சுக்கு, திமுக எம்.பி. சிவாவும் ஆதரவு தெரிவித்து பேசினார்.
பொங்கல் நெருங்கும் நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தராவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் ராஜ்யசபாவில் விஜிலா சத்யானந்த் இப்பிரச்சினையை கிளப்பி கூறுகையில், 1500 வருடங்கள் பழமை வாய்ந்தது ஜல்லிக்கட்டு. மதுரை அருகில் அதற்கான பெயிண்டிங் ஆதாரங்கள் உள்ளன. எனவே கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றார்.
இவரது கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் திமுகவின் எம்.பி. திருச்சி சிவாவும் பேசினார்.












Click it and Unblock the Notifications