300 பெண்களுடன் உறவு வைத்து எய்ட்ஸ் பரப்பிய ஆட்டோ டிரைவர்!
ஹைதராபாத்: தனக்கு எய்ட்ஸ் இருப்பதை தெரிந்துகொண்ட பிறகும், கள்ளக்காதலிகளுடனும், பாலியல் தொழிலாளிகளுடனும் பாதுகாப்பற்றமுறையில் உடலுறவு வைத்துக்கொண்டு அவர்களுக்கு நோயை பரப்பி வந்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஹைதராபாத்தின், மல்கஜ்கிரி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஜேம்ஸ் (31). கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், ஆட்டோ ஓட்டிவந்தார்.

3 கல்யாணம்
திருட்டு வழக்கு ஒன்று தொடர்பாக சமீபத்தில் போலீசார் இவரை கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவலை சொல்லியுள்ளார். ஜோசப் ஜேம்ஸ் அளித்துள்ள வாக்குமூலம்: எனக்கு மூன்றுமுறை திருமணமாகியுள்ளது. ஆனால் எனது மது, மாது பழக்கங்களால் மூன்று மனைவிகளும் என்னைவிட்டு போய்விட்டனர்.

காமுக வாழ்க்கை
நான் தினமும் ஒரு விபச்சார பெண்களிடமாவது போவது வாடிக்கை. இதுதவிர, நான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது ஏற்படும் பழக்கத்தால் பல குடும்பத் தலைவிகள் எனக்கு கள்ளக்காதலிகளாக மாறினர். அவர்களோடும் உல்லாசம் அனுபவிப்பேன்.

எய்ட்ஸ்
சமீபத்தில் எனக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. இருப்பினும், நான் செக்ஸ் பழக்கத்தைவிடவில்லை. குடும்ப பெண்களிடமும், விபச்சாரிகளிடமும், ஆணுறை அணியாமலே தொடர்ந்து உடல் உறவு வைத்துக்கொண்டேன். மொத்தம் 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருடிக்கு தேள் கடித்த கதை
இதனிடையே ஜோசப்பிடம் உல்லாசம் அனுபவித்த குடும்ப பெண்கள், தங்களுக்கும் எய்ட்ஸ் வந்திருக்குமோ என்ற அச்சத்தில் புழுங்கிவருகின்றனர். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் அவர்கள் துடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த பெண்களின் பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications