கர்நாடகாவில் விமானப் படை பயிற்சி விமானம் விழுந்து விபத்து- உயிர் தப்பிய விமானிகள்!
சாம்ராஜ்நகர்: கர்நாடகா மாநிலத்தில் விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் இன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயிற்சி பெண் விமானி உள்ளிட்ட விமானிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

கர்நாடகா மாநிலத்தில் நமது நாட்டின் விமானப் படையின் சூர்யா கிரண் ரக பயிற்சி விமானத்தில் விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. சாம்ராஜ்நகர் மாவட்டம் போகபுரா கிராமத்தில் பொட்டல்வெளியில் இரண்டு துண்டாக விமானம் விழுந்து தீப்பிடித்தது.

இப்பயிற்சி விமானத்தில் இருந்த பெண் விமானி உள்ளிட்ட இரு விமானிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக விமானப் படை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மாதம் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 3 விமானிகள் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications