For Daily Alerts
Just In
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – ஜெய்ப்பூரில் தரை இறக்கம்
அகமதாபாத்: டெல்லியிலிருந்து அகமதாபாத் வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் 104 பயணிகள் இருந்தனர். விமானம் பிரச்சினையின்றி தரையிறங்கியது.
ஏர்பஸ் 321 ரக விமானமான அது காலை 6 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பியது. வழியில் என்ஜின்களில் ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டதால் ஜெய்ப்பூரில் 7.25 மணிக்கு அது தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து ஜெய்ப்பூர் விமான நிலைய ஏர் இந்தியா மேலாளர் அனில் கூறுகையில், "என்ஜின்களில் ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டதால் விமானம் தரையிறக்கப்பட்டது" என்றார்.
பின்னர் வேறு விமானத்தில் பயணிகள் அகமதாபாத் அழைத்துச் செல்லப்பட்டனர்.
Comments
English summary
An Air India flight from Delhi to Ahmedabad carrying 104 passengers made an emergency landing in Jaipur after a problem in one of its engines.
Story first published: Friday, August 22, 2014, 17:18 [IST]