மும்பை விமானத்தில் பறவை மோதி எஞ்ஜின் கோளாறு- போபாலில் அவசர தரையிறக்கம்
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்திய விமானம் 634 இன்று காலை போபாலின் ராஜா போஜ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மும்பை நோக்கி கிளம்பிய இவ்விமானத்தில் கிளம்பிய சில நிமிடங்களில் பறவை ஒன்று மோதியதால் எஞ்ஜின் கோளாறு ஏற்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், ஒரு சிறிய எஞ்ஜின் கோளாறு என்றும், சரி செய்யப்பட்டு 15 முதல் 20 நிமிடங்களில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லா பயணிகளும் பத்திரமாக இருந்தனர் என்றும், விமானத்தை விட்டு இறக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications