ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பா? என விசாரணை- சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
டெல்லி: மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வலியுறுத்தினார் என்பது அடிப்படை வழக்கு. இந்த வழக்கில் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமம் ஆதாயம் அடைந்தது என்பதும் புகார்.

இந்த வழக்கில் விதிமுறைகளை மீறி மேக்சிஸ் நிறுவனமானது இந்திய நிறுவன்மான ஏர்செல் நிறுவனப் பங்குகளை வாங்கியது; இதற்கு அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் உடந்தை என புகார் கூறி வருகிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. அப்போது மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்களும் ஆதாயமடைந்தன என்பதும் சுப்பிரமணியன் சுவாமியின் நீண்டகால குற்றச்சாட்டு.
இதனிடையே ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது சிபிஐ தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேட்டில் ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, ப.சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரணை நடைபெறுவது என்பதே மிகப் பெரிய வெற்றி. இந்த வழக்கில் ப.சிதம்பரம் சிறைக்குப் போகும் நேரம் வந்துவிட்டது என கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications