நான், எனதும் என்னுடையது என பேசும் மோடி சுயநலம் மிக்க ஆடு...: அஜித்சிங் பாய்ச்சல்
அலிகார்: பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை சுயநலமிக்க ஆடு போன்றவர் என விமர்சித்துள்ளார் ராஷ்டிரிய லோக்தள சக்தி கட்சித் தலைவர் அஜித் சிங்.
தேர்தல் களத்தில் மோடியை மற்றவர்களும், மற்றவர்களை மோடியும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இந்த வரிசையில் இப்போது அஜீத் சிங்கும் மோடியை ஆடு என்று வர்ணித்துள்ளார்

உத்திரப்பிரதேசம் அலிகார் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார் அஜித் சிங். அப்போது அவர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். மோடியை ஆடு எனக் குறிப்பிட்ட அஜீத் சிங், அவரை சுயநலமானவர் எனச் சாடினார்.
மேலும், இது தொடர்பாக பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது :-
நரேந்திர மோடி பாஜக அரசு அமையும் என்று கூறுவதில்லை, தனது அரசு தான் என்று பேசி வருகிறார். மோடி நான், எனது, என்னுடையது என்று மட்டும் தான் பேசுகிறார். அதனால் தான் நான் கூறுகிறேன், மோடி சுயநலமிக்க ஆடு என்று' என இவ்வாறு அவர் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications