'சைக்கிளுக்காக' சண்டை போடும் அப்பா-மகன்.. தேர்தல் கமிஷனிடம் போன சமாஜ்வாதி பஞ்சாயத்து
டெல்லி: சமாஜ்வாதி கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ், அடுத்து கட்சி சின்னமான சைக்கிள் சின்னத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
கட்சியின் செயற்குழுவை கூட்டி தேசிய தலைவராக தன்னை அறிவித்துள்ளார் அகிலேஷ் யாதவ். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தையும், கட்சியின் நிறுவன தலைவருமான முலாயம்சிங் யாதவ், நேற்று தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்று சைக்கிள் சின்னம் தனது தலைமையிலான கட்சிக்கு உரியது என்று கூறி மனு கொடுத்தார்.

இதையடுத்து அதே போன்று ஒரு கோரிக்கை மனுவை தேர்தல் கமிஷனிடம் இன்று அகிலேஷ் தரப்பை சேர்ந்த ராம்கோபால் யாதவ் தலைமையிலான நிர்வாகிகள் வழங்கினர். நாங்கள்தான் உண்மையான சமாஜ்வாதி கட்சியினர். 90 சதவீதம் ஆதரவு எங்களுக்கே உள்ளது என ராம்கோபால் யாதவ் தெரிவித்தார்.
இரு தரப்பும் கட்சி சின்னம் கேட்டு மனு கொடுத்துள்ளதால், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சைக் ள் சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்துவார்கள். பிறகு முலாயம் - அகிலேஷ் இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி யாருக்கு கட்சியில் அதிக ஆதரவு இருக்கிறது என்பது பற்றி தலைமை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும். அந்த ஆய்வில் தெளிவான நிலை கிடைத்தால் யாருக்காவது ஒருவருக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கும். தேர்தல் கமிஷனால் ஒரு முடிவுக்கு வர முடியாத பட் சத்தில், சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னம் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications