ராமர் கோயில் கட்ட வலியுறுத்தும் வி.ஹெச்.பி.யின் 'சங்கல்ப் திவாஸு'க்கு உ.பி. அரசு தடை
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்த திட்டமிட்டிருந்த 'சங்கல்ப் திவாஸ்' கூட்டத்துக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு தடை விதித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க ராமர் கோயில் விவகாரமும் விஸ்வரூபமெடுத்து வருகிறது. இதனால் உத்தரப்பிரதேச மாநிலம் தொடர்ந்தும் பதற்றத்தில் இருந்து வருகிறது.
அண்மையில்கூட முசாபர்நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 49 பேர் உயிரிழந்தனர். 50 ஆயிரம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில் அக்டோபர் 18-ந் தேதியன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை உறுதிப்படுத்த நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வலியுறுத்தி 'சங்கல்ப் திவாஸ்' கூட்டத்துக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் இதற்கு நேற்று மாநில அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து பைசாபாத் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஸ்வ ஹிந்து பரிஷத்தின் யாத்திரை ஒன்றுக்கும் உத்தரப்பிரதேச மாநில அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications