For Daily Alerts
Just In
விவசாயிகளுக்கு ரூ.90 லட்சம் அளித்துவிட்டு கப்சிப்புன்னு இருக்கும் பிரபல நடிகர்
மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மகாராஷ்டிரா மாநிலத்தில் வாடும் விவசாயிகளுக்கு ரூ.90 லட்சம் நிதி அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் விவசாயம் இல்லாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் விவசாயிகளின் நிலை குறித்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரிடம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கஷ்டத்தை கேட்ட அக்ஷய் குமார் ரூ.90 லட்சம் நிதியை அளித்துள்ளார். நிதி அளித்ததை பற்றி அக்கி பேச விரும்பவில்லை.
இது குறித்து அக்ஷய் குமார் கூறுகையில்,
நன்கொடை அளிப்பது பற்றி நான் பேச விரும்பவில்லை. தானம் அளிப்பது பற்றி பேச ஒரு மாதிரியாக உள்ளது என்றார்.
ஒரு ரூபாய் நன்கொடை அளித்தாலும் அதை பெருமையாக பேசிக் கொள்ளும் நபர்களுக்கு மத்தியில் அக்கி வித்தியாசமானவர் என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.
Comments
English summary
Bollywood actor Akshay Kumar has given Rs. 90 lakh for the farmers who are suffering in Maharashtra.
Story first published: Friday, September 18, 2015, 18:15 [IST]