For Daily Alerts
Just In
தமிழகத்தில் காலூன்றுகிறதா அல்கொய்தா பயங்கரவாத இயக்கம்? திடுக் தகவல்
டெல்லி: தமிழகத்தில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் காலூன்றுவதாக உளவுத்துறை துறை அதிகாரிகள் திடுக் தகவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
- காஷ்மீரில் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்ட போது இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா இயக்கம் தமிழில் 3 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
- தமிழில் அறிக்கை வெளியிட்டதன் மூலம் தென்னிந்தியாவை அல்கொய்தா இலக்கு வைத்திருப்பது உறுதியாகி உள்ளது.
- தென்னிந்தியாவில் காலூன்ற பல இடங்களில் முயற்சித்தும் அல்கொய்தாவால் முடியாமல் போனது.
- தற்போது அல்கொய்தா, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அல் உம்மாவுடன் இணைந்து காலூன்ற முயற்சிக்கிறது.
- அல் உம்மா இயக்கத்தினர் மீது கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் 3 நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது.
- இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள், அல் உம்மா இயக்கத்தினர் ஒசாமா பின்லேடனுக்கு விசுவாசியாக இருந்தனர்.
- இந்திய துணைக்கண்டத்துக்கான அல் கொய்தா இயக்கத்தை அமைப்பதில் அல் உம்மாவினர் உதவியாக இருந்தனர் என தெரிவித்துள்ளனர்.
- தமிழகத்துக்கான பிரதிநிதிகளை அல்கொய்தா ஏற்கனவே நியமித்திருக்கிறதாம்.
- தமிழகத்தில் அல்கொய்தா இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு இந்தோனேசியாவில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- இந்தோனேசியாவில் லஷ்கர் இ தொய்பா வலுவாக காலூன்றி இருக்கிறது. அந்த இயக்கத்தின் உதவியை அல்கொய்தா கோரியுள்ளது.
- அல் உம்மா இயக்கம்தான் பெங்களூரு மல்லேஸ்வரம் பாஜக அலுவலக குண்டுவெடிப்பை நிகழ்த்தியது.
- இதேபோல் கொல்லம், மைசூரு நீதிமன்றங்களுக்கு வெளியே குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியதும் அல் உம்மாதான்.
இவ்வாறு உளவுத்துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
English summary
When the al-Qaeda in the sub-continent or the AQIS released a three page note in Tamil in the aftermath of the Burhan Wani killing, there was a message to South India.
Story first published: Tuesday, August 23, 2016, 13:58 [IST]