அல் கொய்தா இந்திய கிளையின் தலைவர் ஒரு இந்தியர்: பிரபல பாக். பத்திரிக்கையாளர் 'குண்டு'
டெல்லி: அல் கொய்தா அமைப்பின் இந்தியா கிளையின் தலைவரான ஆசிம் உமர் ஒரு இந்தியர் என பிரபல பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர் ஹமீத் மிர் தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் இந்தியா கிளையின் தலைவர் ஆசிம் உமர். ஷேக் உமர் என்றும் அழைக்கப்படும் அவர் ஒரு இந்தியர் என பிரபல பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர் ஹமீது மிர் தெரிவித்துள்ளார். மேலும் உமரை கடந்த 2005 மற்றும் 2007ம் ஆண்டில் தான் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிம் உமர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை மத்திய உளவுத் துறை உறுதி செய்துள்ளது.

உத்தர பிரதேசம்
ஆசிம் உமர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதை உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் இந்தியர் தான் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று உளவுத் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா
உமர் 1989ம் ஆண்டில் இருந்து இந்தியாவுக்கு வருவதும், போவதுமாக உள்ளார். அவர் இந்தியாவில் இருக்கையில் சிமி ஆட்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். 1995ம் ஆண்டில் தான் அவர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் செட்டிலாவது என்று முடிவு செய்துள்ளார். அவர் கராச்சியில் உள்ள ஜாமியா உலூம் இ இஸ்லாமியா பள்ளியில் படித்தவர்.
ஹர்கத்துல் முஜாஹிதீன்
உமர் முதன்முதலில் ஹர்கத்துல் முஜாஹிதீன் அமைப்பில் தான் சேர்ந்துள்ளார். அவரது வேகம், ஈடுபாட்டை பார்த்து தான் அல் கொய்தா அவரை தங்கள் அமைப்பில் சேர்த்துள்ளது. காஷ்மீர் பிரச்சனையால் தான் அவர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
அல் கொய்தா
அல் கொய்தாவில் இஸ்லாமியர்களின் ஷரியா சட்டம் பற்றி போதித்து பல இளைஞர்களை அமைப்பில் சேர்ப்பது தான் உமரின் வேலையாக இருந்தது.
சிமி
உமர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மாறி மாறி இருந்தாலும் இந்தியாவில் உள்ள சிமி அமைப்புடன் தொடர்பில் உள்ளார். தான் ஒரு அல் கொய்தா தலைவருடன் தொடர்பில் இருப்பதாக சிமி தலைவர் சப்தர் நாகூரி தெரிவித்துள்ளார். அவர் தொடர்பில் இருக்கும் அந்த தலைவர் உமர் என்று உளவுத் துறை சந்தேகிக்கிறது.
விசாரணை
பாட்னா குண்டுவெடிப்பில் கைதான ஹைதர் அலியும், சிமி தலைவர் நாகூரியும் கூறுகையில், தாங்கள் தொடர்பில் இருக்கும் அல் கொய்தா தலைவர் இந்தியர்களை போன்று உருது மொழி பேசுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications