அல் கொய்தா இந்திய கிளையின் தலைவர் ஒரு இந்தியர்: பிரபல பாக். பத்திரிக்கையாளர் 'குண்டு'
டெல்லி: அல் கொய்தா அமைப்பின் இந்தியா கிளையின் தலைவரான ஆசிம் உமர் ஒரு இந்தியர் என பிரபல பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர் ஹமீத் மிர் தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் இந்தியா கிளையின் தலைவர் ஆசிம் உமர். ஷேக் உமர் என்றும் அழைக்கப்படும் அவர் ஒரு இந்தியர் என பிரபல பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர் ஹமீது மிர் தெரிவித்துள்ளார். மேலும் உமரை கடந்த 2005 மற்றும் 2007ம் ஆண்டில் தான் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிம் உமர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை மத்திய உளவுத் துறை உறுதி செய்துள்ளது.
உத்தர பிரதேசம்
ஆசிம் உமர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதை உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் இந்தியர் தான் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று உளவுத் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா
உமர் 1989ம் ஆண்டில் இருந்து இந்தியாவுக்கு வருவதும், போவதுமாக உள்ளார். அவர் இந்தியாவில் இருக்கையில் சிமி ஆட்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். 1995ம் ஆண்டில் தான் அவர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் செட்டிலாவது என்று முடிவு செய்துள்ளார். அவர் கராச்சியில் உள்ள ஜாமியா உலூம் இ இஸ்லாமியா பள்ளியில் படித்தவர்.
ஹர்கத்துல் முஜாஹிதீன்
உமர் முதன்முதலில் ஹர்கத்துல் முஜாஹிதீன் அமைப்பில் தான் சேர்ந்துள்ளார். அவரது வேகம், ஈடுபாட்டை பார்த்து தான் அல் கொய்தா அவரை தங்கள் அமைப்பில் சேர்த்துள்ளது. காஷ்மீர் பிரச்சனையால் தான் அவர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
அல் கொய்தா
அல் கொய்தாவில் இஸ்லாமியர்களின் ஷரியா சட்டம் பற்றி போதித்து பல இளைஞர்களை அமைப்பில் சேர்ப்பது தான் உமரின் வேலையாக இருந்தது.
சிமி
உமர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மாறி மாறி இருந்தாலும் இந்தியாவில் உள்ள சிமி அமைப்புடன் தொடர்பில் உள்ளார். தான் ஒரு அல் கொய்தா தலைவருடன் தொடர்பில் இருப்பதாக சிமி தலைவர் சப்தர் நாகூரி தெரிவித்துள்ளார். அவர் தொடர்பில் இருக்கும் அந்த தலைவர் உமர் என்று உளவுத் துறை சந்தேகிக்கிறது.
விசாரணை
பாட்னா குண்டுவெடிப்பில் கைதான ஹைதர் அலியும், சிமி தலைவர் நாகூரியும் கூறுகையில், தாங்கள் தொடர்பில் இருக்கும் அல் கொய்தா தலைவர் இந்தியர்களை போன்று உருது மொழி பேசுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.