என்னது, உ.பி.யில் வேற்றுகிரக வாசிகளா?: யு.எப்.ஓ.வை போட்டோ எடுத்த சிறுவன்
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவர் தனது செல்போனில் எடுத்த புகைப்படத்தில் வேற்று கிரக வாசிகளின் விண்கலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள ஷ்யாம் நகரில் வசித்து வருபவர் சந்தோஷ் குப்தா. அவரது மகன் அபிஜித். சிறுவன் தனது வீட்டு பால்கனியில் நின்று செல்போனில் காலை நேர வானத்தை புகைப்படம் எடுத்தார். பின்னர் தான் எடுத்த புகைப்படங்களை செல்போனில் அவர் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
காரணம் ஒரு புகைப்படத்தில் வானில் வேற்று கிரக வாசிகளின் விண்கலம் இருந்தது.
இது குறித்து அபிஜித் கூறுகையில்,
நான் வேற்றுகிரக விண்கலத்தை என் கண்ணால் பார்க்கவில்லை. நான் செல்போனில் எடுத்த புகைப்படத்தில் அது இருந்தது என்றார்.
சந்தோஷ் குப்தா கூறுகையில்,
என் மகன் எடுத்த புகைப்படங்களை செல்போனில் பார்க்கையில் வட்ட வடிவில் உள்ள ஒன்றில் சிகப்பு நிற விளக்கு எரிந்தபடி இருந்தது. அந்த பொருளில் இருந்து புகையும் வந்தது என்றார்.