இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கிணற்றில் தள்ளிய காமுகன்: 15 மணி நேரத்திற்கு பின் மீட்பு

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வயல்காட்டிற்குச் சென்ற பெண்ணை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்து கிணற்றில் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடிய விடிய கிணற்றுக்குள் போராடிய பெண்ணை 15 மணிநேரம் கழித்து மீட்டுள்ளனர்.

பில்வாரா பகுதியில் 17 வயது பெண் வயல் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் ஒரு மர்ம நபர் அவளை மிரட்டி கடத்தி சென்றார். காட்டுப் பகுதியில் அந்த பெண்ணை மிரட்டி அவர் பலாத்காரம் செய்துவிட்டு வயல்வெளியில் இருந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டு விட்டு ஒடிட்டான்.

கிணற்றுக்குள் விழுந்த அந்த பெண் உதவி கோரி கத்தி கூச்சலிட்டாள். அப்போது பலத்த மழை பெய்ததால் அவள் குரல் வெளியில் கேட்கவில்லை. மழையில் நனைந்து கொண்டே இரவு முழுக்க அந்த பெண் கிணற்றுக்குள் இருந்த பம்புசெட் குழாயை பிடித்தபடி போராடினாள்.

காலையில்தான் அவள் குரல் கேட்டு வயல் வேலைக்கு வந்த விவசாயிகளுக்குக் கேட்டது. அவர்கள் ஓடி வந்து கிணற்றுக்குள் இருந்த பெண்ணை மீட்டனர்.

சுமார் 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+