ஒருவேளை இத்தாலிய மொழியில் சொன்னால்தான் மத்திய அரசுக்குப் புரியுமோ?.. சந்திரபாபு தாக்கு!!

ஆந்திராவை பிரிக்கக் கூடாது- தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் இன்று காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ளார்.
தமது உண்ணாவிரதத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு, 70 நாட்களாக சீமாந்திரா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சீமாந்திரா மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். ஒரு ஜனநாயகம் என்பது தேர்தல் என்பது மட்டுமல்ல.
மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் முன்வர வேண்டும். ஆனால் பிரச்சனையைத் தீர்க்க காங்கிரஸ் விரும்பவில்லை. சீமாந்திரா மக்களின் உணர்வுகளை immobilismo (எதுவும் செய்யாமல் இருக்கும் கொள்கை) என்பது போல இத்தாலிய மொழி வார்த்தைகளில் சொன்னால்தான் மத்தியில் ஆட்சியில் இருப்போருக்கு புரியும் போல..
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகனுக்கு ஜாமீன் கிடைக்க காங்கிரஸ் உதவி செய்துள்ளது. அவருடன் இணைந்து சீமாந்திராவில் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியால் நாட்டுக்கே பேரழிவுதான் என்றார்.












Click it and Unblock the Notifications