அமிர்தசரஸ்: 25 துப்பாக்கிக் குண்டுகளுடன் விமானம் ஏற முயற்சித்த அமெரிக்க பெண் பயணி கைது
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: அமிர்தசரஸில் 25 துப்பாக்கிக் குண்டுகளுடன் விமானம் ஏற முற்பட்ட அமெரிக்க பெண் பயணியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து டெல்லி புறப்பட இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளிடம் வழக்கமான பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, அமெரிக்க பெண் பயணி ஒருவரின் கைப்பையில் 25 துப்பாக்கிக் குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
அக்குண்டுகள் அனைத்தும் செயல்படும் தகுதி பெற்றவையாக இருந்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பெண்ணைக் கைது செய்த போலீசார், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications