ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துடன் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா இன்று சந்தித்து பேசினார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணமே, இடஒத்துக்கீடு முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற மோகன் பகவத்தின் பேச்சுதான் என பா.ஜ.க. எம்.பி.க்களே போர்க்கொடி தூக்கினர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை டெல்லியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது பீகார் தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கபட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications