"முரட்டு சிங்கிள்".. பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி.. தெலுங்கானா தேர்தலில் 3 முனை போட்டி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தெலுங்கானா தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி... அமித்ஷா அதிரடி-வீடியோ

    ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் அமித் ஷா இன்று அறிவித்தார்.

    தெலுங்கானாவில் பதவிக்காலம் முடிவடைவதற்கு 9 மாதங்கள் முன்பாகவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும் முதல்வருமான சந்திரசேகரராவ் ஆட்சிக்காலத்தை முடித்துக் கொள்வதாக கூறி அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்து, அதை ஆளுநருக்கு பரிந்துரையாக அனுப்பினார்.

    இதை ஏற்று சட்ட சபை கடந்த 6ம் தேதி கலைக்கப்பட்டது.

    தெலுங்கு தேசம் கூட்டணி

    தெலுங்கு தேசம் கூட்டணி

    எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் தெலுங்கானாவில் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நெருக்கமாக இருந்து வரும் நிலையில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    வேட்பாளர் பட்டியல்

    வேட்பாளர் பட்டியல்

    மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், கடந்த 6ம் தேதி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வெளியிட்ட பட்டியலில் 105 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மீதமுள்ள தொகுதிகள் ஒருவேளை பாஜகவிற்கு வழங்கப்படும் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் பலரும், தேர்தலுக்கு பிறகு கூட்டணி இருக்க வாய்ப்புள்ளது, முன்கூட்டியே கூட்டணி இருக்காது என்றார். இப்படியான, பல்வேறு யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    தனித்து போட்டி

    தனித்து போட்டி

    ஹைதராபாத்தில் இன்று பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமித்ஷா அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். இம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வலுவான சக்தியாக உருவெடுக்கும் என்றார். இதன் மூலம், தெலுங்கானாவில், மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

    செலவு அதிகம்

    செலவு அதிகம்

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாஜகவின் திட்டத்திற்கு முதலில் சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்தார். ஆனால் இப்போது முன்கூட்டியே ஆட்சியை கலைத்து சட்டசபைக்கு தனியாகவும் லோக்சபாவுக்கு தனியாகவும் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளார். இதன் மூலம், இந்த சிறிய மாநிலத்திற்கு அதிக பொருட்செலவை ஏற்படுத்திவிட்டார் என்று அமித்ஷா குற்றம் சாட்டினார்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+