ஸ்ரீதேவி இறப்பை அமிதாப்புக்கு முன்கூட்டியே சொன்னதா உள்ளுணர்வு?
மும்பை: மனம் வேதனை அடைவதாகவும், காரணம் தெரியவில்லை என்றும் அமிதாப் பச்சன் போட்ட டுவீட், ஸ்ரீதேவி இறப்பை காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனது உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர், மகள் குஷியுடன் துபாய் சென்றார் ஸ்ரீதேவி. அப்போது இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்தது. இந்த திடீர் இறப்பால் திரைத்துலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.
T 2625 - न जाने क्यूँ , एक अजीब सी घबराहट हो रही है !!
— Amitabh Bachchan (@SrBachchan) February 24, 2018
ஆனால் அவரது இறப்பு செய்தி நள்ளிரவு 3 மணிக்குதான் வெளியே தெரிந்தது. எனினும் நடிகர் அமிதாப் பச்சன் நள்ளிரவு 1 மணிக்கு இந்தியில் ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில் தான் வேதனையாக உணர்கிறேன் என்றும் அதற்கான காரணம் தெரியவில்லை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதன் பிறகு, 2 மணி நேரத்துக்கு பின்னர் ஸ்ரீதேவி இறந்த செய்தி வெளியே தெரிந்தது. அவரது இறப்பு செய்தி அமிதாப்பின் உள்ளுணர்வு முன்கூட்டியே உணர்த்தியதன் காரணமாக அவர் இந்த டுவீட்டை போட்டாரா. அல்லது வெளியுலகத்துக்கு அறிவிப்பதற்கு முன்னர் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் அமிதாப்புக்கு அறிவித்தனரா என்று தெரியவில்லை.