பஞ்சாப் கோர விபத்தில் மக்களை காப்பாற்ற முயன்ற ராவண வேடமிட்டவர் ரயிலில் சிக்கி பலி
Recommended Video

அமிர்தசரஸ்: பஞ்சாப் கோர விபத்தில் மக்களை காப்பாற்ற முயன்ற ராவண வேடத்தில் நடித்த தல்பீர் சிங் ரயில் மோதி இறந்தார்.
பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில் தசரா விழாவையொட்டி ராவண வதம் நடைபெற்றது. அப்போது ராவணன் உருவபொம்மையை எரித்துக் கொண்டிருந்தனர்.

இன்னொரு பக்கம் பட்டாசுகளும் வெடித்தன. அப்போது பெரிய பெரிய தீ வந்து விழுந்ததைப் பார்த்த மக்கள் பயந்து ஓடியுள்ளனர். அருகே இருந்த ரயில்வே தண்டவாளத்தின் மீது மக்கள் ஏறி ஓடியபோது, ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் அவர்கள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. இந்த கோர விபத்து குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோரா பதாகில் ரயில்வே டிராக் அருகே நின்று கொண்டு ஏராளமானோர் தசரா விழாவையும் வாண வேடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
[திண்டிவனம் அருகே லாரி- கார் மோதி விபத்தில் 3 பேர் பலி.. 8 மாத குழந்தை தாய், தந்தையை இழந்த பரிதாபம்]
ராவணன் வேடமிட்டவர் தல்பீர் சிங். இவர் தனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பட்டாசு வெடிப்பதை பார்ப்பதற்காக ஜோதா பதாக் நோக்கி நடந்து சென்றார். அப்போது அங்கு ஒரு ரயில் வேகமாக வந்து கொண்டிருந்ததை கவனித்த தல்பீர் சிங், ரயில் வருவதை கண்டு கூச்சலிட்டார்.
அதற்குள் அவர் ரயிலில் சிக்கி பலியாகிவிட்டார். விபத்தில் இருந்து மற்றவர்களை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் குரல் கொடுத்த தல்பீர் சிங்குக்கு மனைவியும் 8 மாதக் குழந்தையும் உள்ளனர்.
தல்பீர் சிங்கின் தாய், தனது மருமகளுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தல்பீரின் தாய் கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளாக சுற்றியுள்ள கிராம மக்கள் ரயில்வே தண்டவாளத்துக்கு 50 மீட்டர் தொலைவில் உள்ள ஜோரா பதாக் பகுதியில் கூடி விழாவை பார்வையிடுவது வழக்கம் என்றார். அப்போது மனைவி கண்கலங்கினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications