அந்தமானில் மிதமான நிலநடுக்கம்.. மக்கள் பீதி
அந்தமானில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
போர்ட்பிளேர்: அந்தமானில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நள்ளிரவு ஒரு மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.3ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன.

இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதேபோல் லேசான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
அக்டோபர் 6ஆம் தேதி அந்தமானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னதாக அக்டோபர் 3ஆம் தேதி 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications