நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று அதிகாலை 4:10 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் நாக்பூருக்கு வடகிழக்கில் 96 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியலுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் ட்வீட் செய்துள்ளதாவது: நிலநடுக்கம் 27-10-2020 அன்று 3.3 மணிக்கு நிகழ்ந்தது. 15 கி.மீ சுற்றளவுக்கு நிலநடுக்கத்தின் மையம் இருந்துள்ளது.
Earthquake of Magnitude:3.3, Occurred on 27-10-2020, 04:10:50 IST, Lat: 21.92 & Long: 79.50, Depth: 15 Km ,Location: 96km NNE of Nagpur, Maharashtra, India for more information https://t.co/1njb2dr8CF pic.twitter.com/Bb1cxNbIn3
— National Centre for Seismology (@NCS_Earthquake) October 26, 2020
மகாராஷ்டிராவின் நாக்பூரிலிருந்து 96 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.