வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வாங்க.. காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் திடீர் கோரிக்கை
தேர்தலுக்கு வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
டெல்லி: தேர்தலுக்கு வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும் பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் நாட்டில் நிலவுகிறது என்றும் நாட்டில் பசுபாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தன. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு ஜனநாயகத்தை பாதுகாக்க குடியரசுத் தலைவரின் தலையீடு உடனடியாக தேவை என பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் தற்போதுள்ள முக்கியப் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்த விவாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
நாட்டில் ஒரு வித பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழும் எதிர்ப்பு குரல்கள் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்ததாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். மேலும் பசு பாதுகப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை தடுக்க வேண்டும் என்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் குலாம் நபி ஆசார் கூறினார்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதால் வாக்குச்சீட்டு முறையை அமல் படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் மனு அளித்துள்ளதாகவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications