For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊருக்கே பயன்படும் ஒரு பொருளை மருமகனுக்கு பரிசாகக் கொடுத்து அசத்திய மாமனார்!

ராஜஸ்தான் மாநிலத்தில் மணமகனுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை மாமனார் பரிசாக வழங்கிய சம்பவம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மகளின் திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை பெண் வீட்டார் பரிசாக வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திருமணம் என்றாலே மணமகனுக்கு பெண் வீட்டில் இருந்து அவரவர் வசதிக்கு ஏற்ப சீர் வரிசை பொருள்கள் வாங்கிக் கொடுக்கப்படும். அந்த வகையில் பைக், நகை, பாத்திரங்கள், வெள்ளி பாத்திரங்கள் என வாங்கித் தருவர்.

An old man gives ambulance as dowry for his son-in-law in Rajasthan

இன்னும் பணக்காரர்கள் வைரம், வைடூரியம், கார், பங்களா,நகை என்று தங்கள் ஆசை மகளுக்கு வாங்கித் தருவர். ஏழைகளோ சொல்லவே வேண்டாம் ஏதோ அவர்களால் முடிந்ததை வாங்கித் தருவர். ஆனால் ராஜஸ்தானில் பெண் வீட்டார் மருமகனுக்கு எந்த வாங்கி கொடுத்தனர் தெரியுமா?

ஆம்புலன்ஸ் வாகனத்தைத்தான். அதுவும் நல்ல நோக்கத்தில்... மேலும் மருமகனும் முகம் சுளிக்காமல் இந்த ஆம்புலன்ஸ் வாகனம் அவசர காலங்களில் கிராம மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று பெருமையாக பெற்றுக் கொண்டார்.வரதட்சணைக்காக மனைவியை துன்புறுத்தி, கொலை செய்யும் அளவுக்கு செல்பவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு மருமகன். சூப்பர்.

English summary
An old man gives dowry which is not only used for the couple only, that is also used for entire villagers in emergency period. Yes, he has gifted Ambulance. This happens in Rajasthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X