அகமதாபாத் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கின்றனர்.
அகமதாபாத்: குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன்காரணமாக பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அங்கு முகாமிட்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது அகமதாபாத் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருக்கிறது. போனில் தொடர்பு கொண்டு அகமதாபாத் தலைமை காவல் நிலையத்தில் சில மர்ம நபர்கள் இந்த தகவலை தெரிவித்து இருக்கின்றனர்.
இதையடுத்து தற்போது அங்கு போலீசாரும், வெடிகுண்டை செயலை இழக்க வைக்கும் நிபுணர்களும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தேடுதல் வேட்டையில் பல மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும் இந்த மிரட்டல் பொய்யானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications