வார்தா புயலால் அந்தமானில் சிக்கிய 2,376 சுற்றுலா பயணிகள்.. பாதுகாப்பு படையினர் மீட்டனர்
வார்தா புயல் எதிரொலியாக அந்தமான் தீவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 2 ஆயிரத்து 376 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
போர்ட் பிளேயர்: வார்தா புயல் எதிரொலியாக நெயில், ஹாவ்லாக் தீவுகளில் இருந்து வெளிநாட்டவர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்து 376 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5-ம் தேதி உருவான வார்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என்றும், ஆந்திராவில் நெல்லூர் - மசூதிப்பட்டினம் இடையே அது கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆந்திர மாநிலத்தில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தமான் யுனியன் பிரதேச தீவுகளில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அந்தமான் நிக்கோபர் யுனியன் பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்திருப்பதாவது:
சுமார் 2 ஆயிரத்து 376 சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணியில் 7 கப்பல்களும், 6 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மீட்புப் பணியில் அந்தமான் நிர்வாகம், கடற்படையினர்,கப்பல் படையினர், விமானப் படையினர் இணைந்து செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தம் 2 ஆயிரத்து 376 பேர் மீட்கப்பட்டதில் ஜெர்மன் நாட்டவர்கள் 2 பேர், 4 ஸ்பெயினியர்கள், சிரியாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 12 வெளிநாட்டவர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நெயில், ஹாவ்லாக் தீவுகளில் இருந்து மீட்கப்பட்டு போர்ட் பிளேயர் கொண்டுவரப்பட்டனர் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை காரணமாக எந்தவிதமான உயிர்ச் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று அந்தமான் துணை நிலை ஆளுநர் ஜெகதீஷ் முகி தெரிவித்துள்ளார். வானிலை நிலவரம் சரியான பிறகு வெள்ளிக்கிழமை மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த யுனியன் பிரதேச நிர்வாகம் கேட்டுக் கொண்ட இருதினங்களில் மீட்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக இந்திய கப்பல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications