30,000 பூத்துகளுக்கு ஆளே இல்லாத ஆந்திரா பாஜக!அமித்ஷா, ஜேபி நட்டா அடுத்தடுத்து விசிட்- டீ யாருக்காம்?
விசாகப்பட்டினம்: மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் எப்படியாவது சிங்கிள் டிஜிட் இடங்களை கைப்பற்றும் முனைப்புடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் அடுத்தடுத்து ஆந்திரா வருகை தருகின்றனர்.
தென்னிந்தியாவில் பாஜக காலூன்றுவது பெரும் போராட்டங்களை பல பத்தாண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறது. கர்நாடகவில் மட்டும்தான் பாஜகவால் வேர்பிடிக்க முடிந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் சிங்கிள் டிஜிட் இடங்களுக்கே சிங்கி அடிக்கும் நிலையில்தான் பாஜக உள்ளது.

ஆந்திரா மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆந்திராவில் பாஜகவுக்கு ஒரு லோக்சபா எம்பி, ஒரு எம்.எல்.ஏ. என யாருமே இல்லை. அந்த அளவுக்கு ஆந்திரா மக்கள் பாஜகவை ஓரம்கட்டி வைத்துள்ளனர். ஆந்திராவைப் பொறுத்தவரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் இடையேதான் போட்டி. தெலுங்குதேசம் கட்சியை விட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வலிமையாக இருக்கிறது.
வரும் சட்டசபை தேர்தலில் கவுரவமான வெற்றியை பெறுவதில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உறுதியாக இருக்கிறார். இதனால் தேர்தல் அறிக்கையின் சில வாக்குறுதிகளை இப்போதே அறிவித்து பிரசாரத்தை தொடங்கிவிட்டார் சந்திரபாபு நாயுடு. அதேநேரத்தில் பாஜகவுடன் மீண்டும் உறவை புதுப்பிக்கும் நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். டெல்லி சென்ற சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். ஆனாலும் பாஜக- தெலுங்குதேசம் கூட்டணி என்பது உறுதி செய்யப்படாத பூடகமான ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் விசாகப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். திருப்பதி பொதுக் கூட்டத்தில் ஜேபி நட்டா ஜூன் 10-ல் பேசுகிறார். அமித்ஷா, ஜேபி நட்டாவின் இந்த வருகையானது ஆந்திரா எனும் பாலைவனத்தில் நிற்கும் பாஜகவுக்கு சற்றேனும் நீரைப் பாய்ச்சுகிற முயற்சியாகத்தான் இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். ஏனெனில் ஆந்திராவில் சுமார் 45,000 வாக்குப் பதிவுக்கான பூத்துகள் உள்ளன. பாஜகவுக்கோ 15,000 வரைதான் பூத்துகளுக்கான பொறுப்பாளர்கள் உள்ளனர்; சுமார் 30,000 பூத்துகளின் பொறுப்பாளர்கள் பாஜகவில் நியமிக்கப்படக் கூட முடியாத பரிதாப நிலையில் இருப்பதாலேயே அமித்ஷா, நட்டாவின் இந்த விசிட் இம்மியும் பயன்தராது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications