ஆந்திரா என்கவுன்ட்டர்: விசாரணையை துவங்கியது தேசிய மனித உரிமை கமிஷன்
ஹைதராபாத்: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பற்றி தேசிய மனித உரிமை கமிஷன் தனது விசாரணையை இன்று துவங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். தொழிலாளர்கள் தங்களை தாக்க வந்ததால் தற்காப்புக்காக அவர்களை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக தொழிலாளர்களின் உடல்களும், செம்மரக் கட்டைகளும் கிடந்த நிலையைப் பார்த்தால் ஆந்திர போலீசார் திட்டமிட்டே அவர்களை கொன்றுள்ளனர் என்று செய்திகள் வெளியாகின. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் தேசிய மனித உரிமை கமிஷன் குழு இன்று தனது விசாரணையை துவங்கியுள்ளது.
தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஹைதராபாத்தில் இன்று முதல் 3 நாட்ளுக்கு விசாரணை நடத்துகிறார்கள். 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு ஏன் உத்தரவிடாமல் இருந்துள்ளனர் என்று தேசிய மனித உரிமை கமிஷன் குழு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வழக்கை கையாண்ட விதம் திருப்திகரமாக இல்லை என்றும் அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications