ஆந்திரா என்கவுன்ட்டர்: விசாரணையை துவங்கியது தேசிய மனித உரிமை கமிஷன்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பற்றி தேசிய மனித உரிமை கமிஷன் தனது விசாரணையை இன்று துவங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். தொழிலாளர்கள் தங்களை தாக்க வந்ததால் தற்காப்புக்காக அவர்களை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Andhra encounter: NHRC begins investigation

தமிழக தொழிலாளர்களின் உடல்களும், செம்மரக் கட்டைகளும் கிடந்த நிலையைப் பார்த்தால் ஆந்திர போலீசார் திட்டமிட்டே அவர்களை கொன்றுள்ளனர் என்று செய்திகள் வெளியாகின. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் தேசிய மனித உரிமை கமிஷன் குழு இன்று தனது விசாரணையை துவங்கியுள்ளது.

தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஹைதராபாத்தில் இன்று முதல் 3 நாட்ளுக்கு விசாரணை நடத்துகிறார்கள். 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு ஏன் உத்தரவிடாமல் இருந்துள்ளனர் என்று தேசிய மனித உரிமை கமிஷன் குழு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வழக்கை கையாண்ட விதம் திருப்திகரமாக இல்லை என்றும் அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+