ஆந்திரா என்கவுன்ட்டர்: 6 தமிழர்களின் உடல் மறுபிரேத பரிசோதனை அறிக்கை இன்று தாக்கல்
ஹைதராபாத்: ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 20 தமிழர்களில் 6 பேரின் மறுபிரேத பரிசோதனை அறிக்கை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்தனர்.
தொழிலாளர்கள் தங்களை தாக்க வந்ததால் தான் சுட்டதாக போலீசார் விளக்கம் அளித்தனர். ஆனால் இது திட்டமிட்ட படுகொலை என்று சமூக ஆர்வலர்கள், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் 20 பேரை கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் திருப்பதி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் முனுசாமி, மூர்த்தி, மகேந்திரன், முருகன், சசிக்குமார், பெருமாள் ஆகியோரின் உடல்களை மறுபடியும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் முனியம்மாள் என்பவர் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து, முனுசாமி உள்ளிட்ட 6 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த 6 பேரின் உடல்களை மறுபடியும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து உஸ்மானியா பல்கலைக்கழக மருத்துவர்கள் குழு கடந்த 18ம் தேதி திருவண்ணாமலை வந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் அந்த 6 பேரின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்தது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications