ஆந்திரா என்கவுன்ட்டர்: 6 தமிழர்களின் உடல் மறுபிரேத பரிசோதனை அறிக்கை இன்று தாக்கல்
ஹைதராபாத்: ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 20 தமிழர்களில் 6 பேரின் மறுபிரேத பரிசோதனை அறிக்கை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்தனர்.
தொழிலாளர்கள் தங்களை தாக்க வந்ததால் தான் சுட்டதாக போலீசார் விளக்கம் அளித்தனர். ஆனால் இது திட்டமிட்ட படுகொலை என்று சமூக ஆர்வலர்கள், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் 20 பேரை கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் திருப்பதி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் முனுசாமி, மூர்த்தி, மகேந்திரன், முருகன், சசிக்குமார், பெருமாள் ஆகியோரின் உடல்களை மறுபடியும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் முனியம்மாள் என்பவர் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து, முனுசாமி உள்ளிட்ட 6 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த 6 பேரின் உடல்களை மறுபடியும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து உஸ்மானியா பல்கலைக்கழக மருத்துவர்கள் குழு கடந்த 18ம் தேதி திருவண்ணாமலை வந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் அந்த 6 பேரின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்தது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
ஜூன் 5க்குள் நான் வரலைனா போலீசுக்கு போயிடு! காதலனுக்கு வந்த வீடியோ.. காட்டித் தந்த ஆந்திரா சக்தி ஆப் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications