ஆந்திர எம்பிகள் தொடர் அமளி... நாடாளுமன்ற இரு சபைகளும் ஒத்திவைப்பு!
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி எம்பிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
டெல்லி : ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி எம்பிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி மார்ச் 5ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 6ம் தேதி வரை இந்த கூட்டத்தொடருக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் நாடாளுமன்றம் தொடங்கியது முதலே பஞ்சாப் நேஷனல் வங்கியை மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய நீரவ் மோடி விவகாரம், ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து கோரி தெலுங்குதேசம் எம்பிகளின் போராட்டம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக எம்பிகள் போராட்டம் என நாடாளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
பாஜகவுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கைக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று தெலுங்குதேசம் கட்சி வெளியேறியுள்ளது.
இதே போன்று அதிமுக எம்பிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர். எம்பிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் லோக்சபா முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் சபை மீண்டும் கூடிய போது அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போன்று ராஜ்யசபா பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இரு சபைகளும் மீண்டும் மார்ச் 19 அதாவது திங்கட்கிழமை கூடுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications